கண்டியில் பயறு செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

கண்டியில் பயறு செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 15-06-2019 | 5:28 PM
Colombo (News 1st) கண்டி - குண்டசாலை நீர்ப்பாசன வலயத்தில் பயறு செய்கையை விஸ்தரிப்பதற்கு மத்திய மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெருமளவு அறுவடையைத் தரக்கூடிய MI-6 வகையைச் சேர்ந்த பயறு விதைகளை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் பயறின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் செய்கை விஸ்தரிக்கப்படுவதாக மத்திய மாகாண விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.