Batticaloa Campus: அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

Batticaloa Campus தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Staff Writer 14-06-2019 | 4:17 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில நிர்மாணிக்கப்படும் Batticaloa Campus நிறுவனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பிலான மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையூடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குழுத்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். Batticaloa Campus தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா, அவரின் புதல்வர் மற்றும் Batticaloa Campus நிறுவனத்தின் பதிவாளர் ஆகியோர் குறித்த குழுவிற்கு நேற்றைய தினம் (13) அழைக்கப்பட்டிருந்தனர். Batticaloa Campus நிறுவனத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பேராசிரியர் ஆஷூ மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.