ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முறைப்பாடு

ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இலங்கை மக்கள் தேசியக் கட்சி  முறைப்பாடு

by Staff Writer 14-06-2019 | 7:03 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இலங்கை மக்கள் தேசியக் கட்சி,பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முறைப்பாடு செய்தது. புனானையில் ஹிஸ்புல்லா அமைத்து வரும் ஷரியா பல்கலைக்கழகத்திற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துள்ளதாகவும் அதனை யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை எனவும் இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் விஷ்ணுகாந்தன் குறிப்பிட்டார்.