300 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை

ஹம்பாந்தோட்டையில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை

by Staff Writer 14-06-2019 | 4:34 PM
Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிவாரண நிதி உதவியின் கீழ் வீட்டுத்தோட்ட உற்பத்தியாக மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முறை 150 ஏக்கரில் ஒட்டு மரமுந்திரிகை மற்றும் விதை மரமுந்திரிகை உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூடுத்தாபனத்தின் உற்பத்தி திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.