பயணிகள் விமானம் ஒன்று மத்தளைக்கு அனுப்பி வைப்பு

பயணிகள் விமானம் ஒன்று மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 14-06-2019 | 3:20 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பயணிகள் விமானம் ஒன்று மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓமான் WY 371 என்ற பயணிகள் விமானமே தரையிறக்கப்பட்டுள்ளதாக மத்தளை விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார். இந்த விமானத்தில் 58 பயணிகள் வருகை தந்துள்ளனர். வானிலை சீரடைந்த பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்தளை விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்