துபாயில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் ஐவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

by Staff Writer 14-06-2019 | 3:49 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபரான மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.