கிளிநொச்சியில் வாகன விபத்து: இளைஞர் பலி

கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 13-06-2019 | 11:20 AM
Colombo (News 1st) கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13ஆம் திகதி) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.