கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பல்கலை மாணவி காயம்

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாணவி காயம்

by Staff Writer 13-06-2019 | 11:25 AM
Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக, கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 21 வயதான யுவதி காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.