மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்

தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்

by Staff Writer 12-06-2019 | 6:57 PM
Colombo (News 1st) நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் அடுத்த சில தினங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை நீடிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நிலப்பரப்பில் காற்றின் வேகம் தொடர்ந்தும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். வடபிராந்தியத்தில் காற்றின் வேகம் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய செய்திகள்