உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் இன்று

சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமை: வருடாந்தம் 1500க்கும் அதிக முறைப்பாடுகள் 

by Staff Writer 12-06-2019 | 10:56 AM
Colombo (News 1st) சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பாமை தொடர்பில் வருடாந்தம் 1500க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலக்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 'குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்கு கொண்டுவருவோம் - கனவுகளை நனவாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் இன்று (12ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறும் உரிமை உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம், பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், வன்முறை மற்றும் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்