தேசிய பொசன் வாரம்: மதுபானசாலைகளுக்கு பூட்டு

அநுராதபுரத்தில் நாளை முதல் 19 வரை மதுபானசாலைகளை மூட நடவடிக்கை

by Staff Writer 12-06-2019 | 10:39 AM
Colombo (News 1st) தேசிய பொசன் வாரம் இன்று (12ஆம் திகதி) ஆரம்பமாகின்றது. இதேவேளை, பொசன் வாரத்தில் வீடுகளிலும் நிறுவனங்களிலும் பௌத்த கொடியைப் பறக்கவிடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதேநேரம், பொசன் வாரத்தை முன்னிட்டு நாளை (13ஆம் திகதி) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அனுராதபுர மாவட்டத்தில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கலால்வரி திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.