இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

by Staff Writer 12-06-2019 | 8:11 PM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுடன் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க இன்று மாலை கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட போதிலும், பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தரப்பினர் குறிப்பிட்டனர். அதற்கமைய, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் நாளை காலை 11 மணிக்கு கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.