by Staff Writer 12-06-2019 | 9:19 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று மாலை கொழும்பு - புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ப்பு பேரணி காரணமாக புறக்கோட்டை ஒல்கொட் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.