நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

by Staff Writer 11-06-2019 | 9:45 AM
Colombo (News 1st) மழையுடன் கூடிய வானிலை காரணமாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்துவிழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அது தொடர்பில் வௌியிடப்படும் அறிக்கைக்கு இணங்க செயற்படுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் காற்றுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.