எல்லயில் வாகன விபத்து: பெண்கள் இருவர் உயிரிழப்பு

எல்லயில் விபத்து: பெண்கள் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 11-06-2019 | 9:43 AM
Colombo (News 1st) எல்ல - இராவணா எல்ல பகுதியில் நேற்றிரவு (10ஆம் திகதி) இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாயவில் இருந்து அல்ப நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி 15ஆம் கட்டை வீதிப் பகுதியில், வீதியை விட்டு விலகி 600 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 38 மற்றும் 37 வயதுடைய இரு பெண்களே இதன்போது உயிரிழந்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்துள்ளதுடன், படுகாயமடைந்த நால்வர் பதுளை பொது வைத்தியசாலை மற்றும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 42 வயதுடைய ஆணொருவர் மற்றும் 8, 10, 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் அடங்குகின்றனர். விபத்து தொடர்பிலான ​மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்