by Staff Writer 11-06-2019 | 7:35 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த மாவட்டங்களில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் டெங்கு நுளம்பு பரவா வண்ணம் சூழலை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், டெங்கு நுளம்பு அதிகம் பரவும் மாவட்டங்களுக்கு விசேட வைத்திய நிபுணர் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.