by Fazlullah Mubarak 10-06-2019 | 8:02 AM
சமூக வலைதளங்கள் ஊடாக இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்ட 90க்கு மேற்பட்ட பதிவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பதிவுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கையளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேஸ்புக் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் இனங்களிடையே முறுகல் ஏற்படும் வண்ணம் வௌியிடப்படும் இனமுறுகலை ஏற்படுத்தும் குரோத பதிவிடல்கள் தொடர்பில் அவதானிப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.