சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

by Staff Writer 10-06-2019 | 4:39 PM
Colombo (News 1st) இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மீதான பயணத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தை மேற்கோள்காட்டி, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பல நாடுகள், இலங்கைக்கான பயணத்தடையை விதித்திருந்தது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.