சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் - மு.க ஸ்டாலின்

சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் - மு.க ஸ்டாலின்

by Fazlullah Mubarak 10-06-2019 | 8:36 AM

தமிழகத்தின் நீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட உடநடியாக தமிழ் நாட்டு சட்டப் பேரவை கூட்டத்தை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின்எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் சட்டமன்ற கூட்டம் இன்னும் நடைபெறாமல் உள்ளமையினால் அரசு துறைகளின் பல பணிகள் முடங்கி கிடப்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒழிக்க வேண்டிய சட்டமன்றத்தை கூட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் ஒவ்வொறு முறையும் பிரதான எதிர் கட்சி குரல் எழுப்ப வேண்டியுள்ளதாக தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களின் முக்கிய பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு இந்த அரசு எப்போதும் முன்வருவது இல்லை எனவும் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.