வெவ்வேறு பகுதிகளில் விபத்து:  ஐவர் பலி

வெவ்வேறு பகுதிகளில் விபத்து: மூன்று மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் பலி

by Staff Writer 08-06-2019 | 3:30 PM
Colombo (News 1st) கெக்கிராவை, கொரஸ்கல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். கெப் வண்டி மோதி இன்று முற்பகல் 8 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 16 வயதபான மாணவர்கள் மூன்று பேரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை அடுத்து ஏ9 வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஏ9 வீதி கெக்கிராவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, கொஸ்கம சாலாவ பகுதியிர் இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியொன்றுடன் கெப் வண்டி மோதி நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி நேற்று (07) மாலை விபத்து இடம்பெற்றுள்ளது. விசுவமடு - தேராவில் பகுதியை சேர்ந்த இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்