by Staff Writer 08-06-2019 | 3:23 PM
Colombo (News 1st) அமைச்சரவையிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்தமைக்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாஷிம், அப்துல் அலீம், மொஹமட் ஹாரிஸ், அமீர் அலி, அலி ஷாஹிர் மௌலான, அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் தங்களின் அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக குறித்த வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.