நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 08-06-2019 | 5:35 PM
Colombo (News 1st) களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் 100 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேல் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா ,அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை ஊடறுத்தும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் முதல் காலி, கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்