மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பியோடிய சிங்கங்கள்

தென் ஆப்பிரிக்க மிருகக்காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பியோட்டம்

by Bella Dalima 08-06-2019 | 4:51 PM
தென் ஆப்பிரிக்காவில் மிருகக்காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள மிருகக்காட்சி சாலையில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன. அவற்றில் 14 சிங்கங்கள் அங்கிருந்து திடீரென மாயமாகிவிட்டன. அவை அங்கிருந்து தப்பி வெளியேறி விட்டதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை தேசிய பூங்கா அருகேயுள்ள பலாபோர்வா நகரில் உள்ள போஸ்கோர் பாஸ்பேட் சுரங்கம் பகுதியில் சுற்றித்திரிகின்றன. எனவே, பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய சிங்கங்களை பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.