by Staff Writer 08-06-2019 | 5:07 PM
Colombo (News 1st) மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் பஸ்ஸொன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட போது, குறித்த பஸ் வீதியை விட்டு விலகிச்சென்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பஸ் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.