ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுமாறு வலியுறுத்தி ஜனாதிபதியிடம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகஜர் கையளிப்பு

by Staff Writer 06-06-2019 | 5:22 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு, ஜனாதிபதியிடம் மகஜரொன்றை கையளித்துள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களுடன் முழுமையான முற்போக்குக் கூட்டணியை அமைத்து, அதற்கு தலைமை தாங்குமாறும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.