கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை நீர்வெட்டு

by Staff Writer 06-06-2019 | 3:23 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (08) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஹோகந்தர பகுதியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, ரத்மலானை மற்றும் சொய்சாபுர வீடமைப்புத் திட்டம் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர திருத்தப் பணிகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.