அக்குரஸ்ஸயில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பலி

அக்குரஸ்ஸயில் மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 06-06-2019 | 9:52 AM
Colombo (News 1st) அக்குரஸ்ஸ - கொணக்கமுல்ல பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (6ஆம் திகதி) காலை 7.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் மோதுண்டே இவர்கள் உயிரிழந்துள்ளனர். தலஹாகம பகுதியைச் சேர்ந்த 45, 56 மற்றும் 76 வயதான மூவரே சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர். அக்குரஸ்ஸ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.