ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தீர்மானம்

by Staff Writer 05-06-2019 | 8:27 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.சதாசிவம் இதனை அறிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தான் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.