நாட்டின் சில பகுதிகளில் தொடரும் மழையுடனான வானிலை

நாட்டின் சில பகுதிகளில் தொடரும் மழையுடனான வானிலை

by Staff Writer 05-06-2019 | 9:56 AM
Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5ஆம் திகதி) 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, சில கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடற்சார் ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் தமது கடல் நடவடிக்கைகளின்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.