100 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் மூவர் கைது

கிளிநொச்சியில் 100 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் மூவர் கைது

by Staff Writer 05-06-2019 | 5:16 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் 100 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் இன்று முற்பகல் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடல் மார்க்கமாக கொண்டு வந்து, காட்டுப் பகுதியில் பதுக்கி வைத்தியிருந்த நிலையில் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கேரளக்கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சிறிய ரக லொறி ஒன்றையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்