இராமேஸ்வர மீனவர்கள் 190 நாட்களின் பின் விடுவிப்பு

இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் 190 நாட்களின் பின் விடுவிப்பு

by Staff Writer 05-06-2019 | 8:40 AM
Colombo (News 1st) சிறைத்தண்டனை அனுபவித்துவந்த இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 190 நாட்களாக சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் குறித்த 4 மீனவர்களும் சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில நேற்று ஆஜர்படுத்தப்பட்டதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையை கவனத்திற்கொண்ட நீதவான் அவர்களை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கடந்த வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதன்போது மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மீனவர்கள் நால்வரும் தற்போது மெரிஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.