தலை பிறை தென்பட்டது: நாளை நோன்புப் பெருநாள்

ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டது: நாளை நோன்புப் பெருநாள்

by Staff Writer 04-06-2019 | 7:48 PM
Colombo (News 1st) ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டுள்ளதால், இலங்கைவாழ் முஸ்லிம்கள் நாளை (05) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர். கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்ற தலை பிறையை தீர்மானிக்கும் மாநாட்டில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.