மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவிப்பிரமாணம்

by Staff Writer 04-06-2019 | 3:28 PM
Colombo (News 1st) மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் இன்று பகல் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாண ஆளநராக செயற்பட்ட அசாத் சாலி நேற்று (03) பகல் இராஜினாமா செய்தார். இதன் காரணமாக மேல் மாகாண ஆளுர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதுடன், அந்த பதவிக்கு ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.