அரச பணியாளர்களின் ஆடை; சுற்றறிக்கையில் திருத்தம்

அரச பணியாளர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில் திருத்தம்

by Staff Writer 04-06-2019 | 10:39 AM
Colombo (News 1st) அரச பெண் ஊழியர்களை சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச பெண் ஊழியர்களை சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்துகொண்டு சேவைக்கு சமூகமளிக்குமாறு கடந்த வௌ்ளிக்கிழமையன்று சுற்றறிக்கை வௌியிடப்பட்டது. அதேபோன்று, அரச ஆண் ஊழியர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய ஆடையை அணிந்துவருமாறும் தெரிவித்து பொதுநிர்வாக அமைச்சினால் கடந்த வாரம் சுற்றறிக்கை வௌியிடப்பட்டது. இந்நிலையில், குறித்த சுற்றறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை மீண்டும் வௌியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். தற்போது அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.