கித்துல் சார்ந்த தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை

கித்துல் செய்கை சார்ந்த தொழில்துறையை மேம்படுத்த விசேட நடவடிக்கை

by Staff Writer 03-06-2019 | 3:10 PM
Colombo (News 1st) இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் கித்துல் செய்கையுடன் சார்ந்த தொழில்துறையை மேம்படுத்தும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கித்துல் செய்கையை விஸ்தரிக்கும் வகையில் இரண்டு மாவட்டங்களிலும் 28 கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கித்துல் மரத்தின் பாகங்களைக் கொண்டு அலுமாரி, கதிரை உள்ளிட்ட வீட்டு உபகரணங்களை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கித்துல் பாணி, வீட்டு உபகரணங்கள் போன்றவற்றை உரிய தரத்துடன் உள்ளூர் மற்றும் வௌிநாட்டு சந்தைகளுக்கு வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.