அக்குரஸ்ஸ துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

அக்குரஸ்ஸ பொலிஸாருடன் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

by Fazlullah Mubarak 02-06-2019 | 8:05 PM

அக்குரஸ்ஸ - ஊருபொக்க பகுதியில் இன்று அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி அக்குரஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபரே இந்ந சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 2.50 மணியளவில் பொலிஸ் குழுவொன்று ஊருபொக்க - உடகந்த பகுதிக்கு சென்றபோது, சந்தேகநபர் மீண்டும் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தியதுடன் இதில், சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.