டிசம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்

டிசம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது: ஜனாதிபதி இந்தியாவில் கருத்து

by Staff Writer 31-05-2019 | 8:56 PM
Colombo (News 1st) எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,
டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்களுள்ளன. இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும், ஆளுங்கட்சியாக இருக்கலாம் எதிர்க்கட்சியாக இருக்கலாம் வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை. அதனால் எனக்கும் அவசரமில்லை. ஏனைய கட்சிகள் தெரிவு செய்யும் வரை நானும் எனது தீர்மானம் குறித்து காத்திருப்பேன்.