ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

by Staff Writer 31-05-2019 | 3:25 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாரென இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30) இந்தியா சென்றார். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தாம் கவலையடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா - இலங்கைக்கிடையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் இந்திய பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.