6 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி கொடுப்பனவு; திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

by Staff Writer 30-05-2019 | 8:34 PM
Colombo (News 1st) 6 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அம்பாறை G.H.வீரசிங்க மைதானத்தில் இன்று நடைபெற்றது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 20,600 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 5000 குடும்பங்களுக்கு ஆரம்ப நிகழ்வில் கொடுப்பனவு வழங்கப்பட்டது. எனினும், திட்டத்தில் முறைகேடுகள் இருப்பதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.