பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமர் நியமனம்

பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமரானார் ஜேம்ஸ் மராபே

by Staff Writer 30-05-2019 | 12:08 PM
Colombo (News 1st) பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே (James Marape) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பப்புவா நியூகினியாவில் தொடர்ந்துவந்த அரசியல் குழப்பநிலைகளுக்குப் பின்னர் முன்னாள் நிதியமைச்சரான ஜேம்ஸ் மராபேயை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக நியமித்துள்ளனர். எரிவாயுத்திட்டம் ஒன்று தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஜேம்ஸ் மராபே தமது நிதியமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனிடையே, பதவியிலிருந்த பிரதமர் பீற்றர் ஓ நீல் (Peter O'Neill) நேற்று (29ஆம் திகதி) தமது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ஜேம்ஸ் மராபே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.