கிளிநொச்சி நகரில் நாளை முதல் நீர்வெட்டு

கிளிநொச்சியில் நாளை முதல் நாளை மறுதினம் வரை நீர்வெட்டு

by Staff Writer 30-05-2019 | 11:07 AM
Colombo (News 1st) கிளிநொச்சி நகரில் நாளை (31ஆம் திகதி) காலை முதல் நாளை மறுதினம் (முதலாம் திகதி) இரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கிளிநொச்சி சுத்திரகரிப்பு நிலையம் மற்றும் நீர் விநியோகத் தாங்கி ஆகியவற்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்காரணமாக, நாளை காலை முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.