கல்முனையில் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் கூட்டம்

by Staff Writer 30-05-2019 | 8:47 PM
Colombo (News 1st) கல்முனை வலய முஸ்லிம் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்று கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது. ரமழான் விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. விடுமுறையின் பின்னர் பாடசாலையை ஆரம்பிக்கும் போது பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. கல்முனை விஜயபாகு படையணியின் மேஜர் W.R. தர்மசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 241 ஆவது படைப் பிரிவின் அக்கரைப்பற்று முகாம் மேஜர் M. ஜயசேனவும் கலந்துகொண்டிருந்தார். எதிர்வரும் திங்கட்கிழமை வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபடவுள்ளனர்.