அணி தலைவர்கள் ராணி எலிசபெத்தை சந்தித்தனர்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்தை சந்தித்தனர்

by Bella Dalima 30-05-2019 | 3:53 PM
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் அணி தலைவர்கள் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்துள்ளனர். 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது. இப்போட்டி ஜூலை 14 ஆம் திகதி வரை 11 இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்தை 10 நாட்டு கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் சந்தித்துள்ளனர். அவர்கள் ராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.