by Staff Writer 30-05-2019 | 11:44 AM
Colombo (News 1st) இஸ்ரேலில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி மீண்டும் பொதுத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இஸ்ரேலில் பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
இதில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், ஆளும் லிகுட் கட்சி வலதுசாரிகளுடனான கூட்டணியுடன் பெரும்பாண்மையை நிரூபிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆளும் லிகுட் கட்சி (Likud Party) பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதால், அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.
இதில் மொத்தமுள்ள 74 வாக்குகளில் ஆதரவாக 45 வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதனால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இஸ்ரேலில் மீண்டும் பொதுத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.