வெல்லாவௌியில் நீரில் மூழ்கி இளைஞர் பலி

வெல்லாவௌியில் நீரில் மூழ்கி இளைஞர் பலி

by Staff Writer 29-05-2019 | 3:52 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வெல்லாவௌி வாய்க்கால் பகுதியில் நீராடச்சென்ற நிலையில் காணாமற்போயிருந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெல்லாவௌி 35 ஆம் கிராமத்தில் உள்ள நவகிரி வாய்க்காலில் நேற்று (28) மாலை 6 இளைஞர்கள் நீராடச்சென்றுள்ளனர். இதன்போது, நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி குறுமண்வௌி 12 -இல் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சு.சந்திரகுமார் என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லாவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.