மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

by Staff Writer 29-05-2019 | 5:31 PM
Colombo (News 1st) யாழ். தென்மராட்சி - மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பிலான கலந்துரையாடல் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் தேவனேந்தினி பாபு, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மின் உற்பத்தி நிலையத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் கலந்துகொண்டிருந்தனர். காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதி முறையாக பெறப்படாததால் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.