சட்டத்தரணி ஒருவர் கைது

பொலிஸ் கான்ஸ்டபிளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சட்டத்தரணி ஒருவர் கைது

by Staff Writer 29-05-2019 | 10:33 AM
Colombo (News 1st) கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சட்டத்தரணி மேல்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும்போது அவரை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளை காயப்படுத்தியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.