புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் நியமனம் 

by Staff Writer 29-05-2019 | 11:25 AM
Colombo (News 1st) புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29ஆம் திகதி) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதனடிப்படையில், ரஞ்சித் மத்தும பண்டார - பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சராகவும் P. ஹரிசன் - விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் வசந்த சேனாநாயக்க - வௌிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.