சோதனை நடவடிக்கைகளின் போது 29 பேர் கைது

சோதனை நடவடிக்கைகளின் போது 29 பேர் கைது

by Staff Writer 29-05-2019 | 3:45 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் நேற்று (28) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் 13 பேரும் கொழும்பின் பல பகுதிகளில் இருந்து 7 பேரும் குருநாகலில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, களுத்துறை மாவட்டத்தை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.