கோட்டை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் மீண்டும் தடுத்து வைப்பு

by Staff Writer 29-05-2019 | 8:51 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கோட்டை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாஜா முஹைதீன் அல் உஸ்மான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் மீண்டும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவிற்கு ஏற்ப தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார். ஹாஜா முஹைதீன் அல் உஸ்மான் மற்றும் அவரது சகோதரரான ஹாஜா முஹைதீன் சுல்தான் சாஹிர் உள்ளிட்ட நால்வர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கத்தி, வாள் மற்றும் பிரசார இறுவெட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.